Monday, May 17, 2010

உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்......எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்......எனக்கா இந்தச் சிலை'
என்று கத்தியது

***************************************
உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்

*************************************

என் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.

அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!

******************************************

இரு விழிகளில்
ஒரு பார்வையைப் போல
நம் இரு இதயத்திற்கும்
ஒரே காதல்தான்.

Monday, May 3, 2010

காலை தென்றல் பாடி வரும் kaalai thenral paadi varum (Movie : Uyarndha Ullam Music : Ilaiyaraja Singer : P.Susheela)

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்...

(காலை தென்றல்)

உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.
(காலை தென்றல்)

தூங்காத விழிகள் ரெண்டு thoonkatha vilzikal (Movie Name:Agni natchathiram Singers:K.J.Yesudhas,S.Janaki Music Director:Ilaiyaraja)

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

தூங்காத விழிகள்............

ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன் mannippaya (Movie : Vinnai Thandi Varuvaya Singers : A.R.Rahman, Shreya Goshal Composer : A.R.Rahman)

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே..

ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா .. .

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹ் உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடக்கி அன்பில் முடிக்கிறேன்
என் காலம் வரை ???

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ..
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம் 


உன் மார்பில் விழி மூடி (Movie: Ninaithen vanthai Music: Deva)

ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்
தினமும் கனவில் உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

எந்தன் வளையல் குலுங்கியதே
கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றதே அன்பே ..

உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்

சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே

உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா

நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
அன்பே


உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்


நான் போகிறேன் மேலே மேலே (Movie: Naanayam Singers: S.P.Balasubramanium, K.S.Chithra Music Director:James Vasanth)

நான்  போகிறேன்  மேலே  மேலே
பூலோகமே  காலின்  கீழே
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே
பூ  வாளியின்  நீரை  போலே
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம்
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்

கண்ணாடி  முன்னே  நின்றே
தனியாக  நான்  பேச
யாரென்னும்  ஜன்னல்  தாண்டி  பார்த்தால்  ஐயோ
உள்பக்கம்  தாழ்பாள்  போட்டும்
அறையினுள்  நீ  வந்தாய்
கை  நீட்டித்  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ
என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம்
பூ  மாலை  செய்தேன்  வாடுதே
என்  மெத்தை  தேடும்  போர்வை  யாவும்  சேலை  ஆகாதோ
வாராதோ  ஆனாலும்  இன்று ,ஹானான்

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய்
தரமாட்டேன்  என்றேனே
கனவென்னும்  கள்ளச்சாவி  கொண்டே  வந்தாய்
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய்
அன்றாட  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள்
காணாமல்  போனேன்  பாதியில்
நீ  வந்து  என்னை  மீட்டி  செல்வாய்  என்று  இங்கேயே
கால்  நோக  கால்  நோக  நின்றேனே

காட்சியோடு பாடலை ரசிக்க............

உனக்கென நான் எனக்கென நீ (Movie - Kadhalil Vizhunthen ,Singers:Ramya,Composers:Vijay Antony)

உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
எதற்காக எதற்காக
இடமாற்றினாய்
இருக்குமொரு துன்பத்தை
கொடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் எனை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் என கொஞ்சம் படுத்தா
ல்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாளுமே
உனது மடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தா
ல்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைததால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தா
ல்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்

மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கி
றோம்
மனித நிலை தாண்டி போகி
றோம்
இனி நம
க்கென்றும்
பிரிவில்லையே.....
ஓஹோஹூஹூஹோ...
பிரிவில்லையே...

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை 

சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே...

ஹே ஹே ஹே. 


இந்த பாடலை கேட்பதற்கு 



காட்சியோடு பாடலை ரசிப்பதற்கு.....