உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்......எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்......எனக்கா இந்தச் சிலை'
என்று கத்தியது
***************************************
உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே
*************************************
நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு
*************************************
ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்
*************************************
ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
*************************************
உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
*************************************
என் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.
அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!
******************************************
இரு விழிகளில்
ஒரு பார்வையைப் போல
நம் இரு இதயத்திற்கும்
ஒரே காதல்தான்.
Monday, May 17, 2010
Monday, May 3, 2010
காலை தென்றல் பாடி வரும் kaalai thenral paadi varum (Movie : Uyarndha Ullam Music : Ilaiyaraja Singer : P.Susheela)
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்...
(காலை தென்றல்)
உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.
(காலை தென்றல்)
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்...
(காலை தென்றல்)
உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.
(காலை தென்றல்)
தூங்காத விழிகள் ரெண்டு thoonkatha vilzikal (Movie Name:Agni natchathiram Singers:K.J.Yesudhas,S.Janaki Music Director:Ilaiyaraja)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...
தூங்காத விழிகள்..........
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..
தூங்காத விழிகள்............
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...
தூங்காத விழிகள்..........
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..
தூங்காத விழிகள்............
ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன் mannippaya (Movie : Vinnai Thandi Varuvaya Singers : A.R.Rahman, Shreya Goshal Composer : A.R.Rahman)
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே..
ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா .. .
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹ் உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடக்கி அன்பில் முடிக்கிறேன்
என் காலம் வரை ???
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ..
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே..
ஒரு நாள் சிரித்தேன் , மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா .. .
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்கிராயே
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓஹ் உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடக்கி அன்பில் முடிக்கிறேன்
என் காலம் வரை ???
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ..
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் ஈரம்
உன் மார்பில் விழி மூடி (Movie: Ninaithen vanthai Music: Deva)
ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்
தினமும் கனவில் உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே
கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றதே அன்பே ..
உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே
உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
அன்பே
உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன்
தினமும் கனவில் உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியதே
கொலுசும் நழுவியதே
வெக்கத்தில் கன்னங்கள் கூசியதே
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றதே அன்பே ..
உன் மார்பில் விழி
மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம்
தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
சின்னக் குயில்கள் உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே
உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
காலை வெயில் நீ பனித்துளி இவளல்லவா
என்னைக் குடித்தே இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா
நிலவே வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
அன்பே
உன் மார்பில் விழி மூடித்
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்
நான் போகிறேன் மேலே மேலே (Movie: Naanayam Singers: S.P.Balasubramanium, K.S.Chithra Music Director:James Vasanth)
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
காட்சியோடு பாடலை ரசிக்க............
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
காட்சியோடு பாடலை ரசிக்க............
Labels:
James Vasanth,
K.S.Chithra,
Naanayam,
S.P.B,
இனிய பாடல்கள்
உனக்கென நான் எனக்கென நீ (Movie - Kadhalil Vizhunthen ,Singers:Ramya,Composers:Vijay Antony)
உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை
எதற்காக எதற்காக
இடமாற்றினாய்
இருக்குமொரு துன்பத்தை
கொடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் எனை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் என கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாளுமே
உனது மடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைததால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கிறோம்
மனித நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும்
பிரிவில்லையே.....
ஓஹோஹூஹூஹோ...
பிரிவில்லையே...
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே...
ஹே ஹே ஹே.
இந்த பாடலை கேட்பதற்கு
காட்சியோடு பாடலை ரசிப்பதற்கு.....
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை
எதற்காக எதற்காக
இடமாற்றினாய்
இருக்குமொரு துன்பத்தை
கொடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் எனை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் என கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாளுமே
உனது மடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைததால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கிறோம்
மனித நிலை தாண்டி போகிறோம்
இனி நமக்கென்றும்
பிரிவில்லையே.....
ஓஹோஹூஹூஹோ...
பிரிவில்லையே...
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான்உயிரென நீ
இருப்பது பிடிக்குதே...
ஹே ஹே ஹே.
இந்த பாடலை கேட்பதற்கு
காட்சியோடு பாடலை ரசிப்பதற்கு.....
Labels:
Kadhalil Vizhunthen,
Ramya,
Vijay Antony,
இனிய பாடல்கள்
Wednesday, April 21, 2010
படித்து ரசித்த கவிதைகள்
உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய்
இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க
வேண்டிய நாளில்லையடிஎன்
உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12
மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
-------------------------------------------------------------------------------------------------------------
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒருமுறைதான் பிறந்தாய் நீ
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
-------------------------------------------------------------------------------------------------------------
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்
கவிதைக்கும் உயிருண்டென!
என் டைரி வெறுமையாய்
இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க
வேண்டிய நாளில்லையடிஎன்
உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12
மணிக்கே
வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய்
நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?
--------------------------------------------------------------------------------------------------------------
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
-------------------------------------------------------------------------------------------------------------
தன் சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான் பிரம்மன்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஒருமுறைதான் பிறந்தாய் நீ
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும் பிறக்கிறேன்!
-------------------------------------------------------------------------------------------------------------
நீ பிறந்தாய்…
பூமிக்கு இரண்டாம் நிலவு
கண்டுபிடிக்கப் பட்டது!
உன் பிறப்பில் தான்
கண்டுகொண்டேன்
கவிதைக்கும் உயிருண்டென!
தபு ஷங்கர் கவிதைகள் 3
என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்
ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு
எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை
--------------------------------------------------------------------------------------------------------------
எதை கேட்டாலும்
உன் வெட்கத்தையே தருகிறாய்..
உன் வெட்கத்தை கேட்டால்
எதை தருவாய்..?
-------------------------------------------------------------------------------------------------------------
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன..
உன்னை நினைவுபடுத்துபவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன
------------------------------------------------------------------
வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.
-----------------------------------------------------------------------------------------------
எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..
----------------------------------------------------------------------------------------------
உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.
"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..
அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்
-----------------------------------------------------------------------------------------------
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !
----------------------------------------------------------------------------------------------
காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.
---------------------------------------------------------------------------------------------- தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!
உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?
----------------------------------------------------------------------------------------------
இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத் தூக்கிப் போட்டுவிடு.
அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------
உறக்கத்திலிருந்து சட்டென்று
விழித்து பார்த்த போது
நீ அருகில் அமர்ந்து என்னையே
பார்த்துகொண்டிருந்தாய் ...
அப்புறம்
விழிப்பு வராதா என்ன .........
-------------------------------------------------------------------------------------------------------------
நீ முகம் கழுவுகையில் ஓடிய
தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா
வேண்டாம் என்று
நீ நீரில் விடுகிறாய்!
--------------------------------------------------------------------------------------------------------------
எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியது எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே
------------------------------------------------------------------------------------------------------------- நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை.
-----------------------------------------------------------------------------------------------
ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.
குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்...
காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை!
------------------------------------------------------------------
என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
தபு ஷங்கர் கவிதைகள் 2
நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.
நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
---------------------------------------------------------------------------------------------------------------
நீ உன் முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கி விடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்க வந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்.
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்ததும்
சிலையாக நின்று விடுகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
அற்புதமான காதலை
மட்டுமல்ல
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.
---------------------------------------------------------------------------------------------------------------
உனக்காகப் பிறந்தவள்,
உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்...
சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.
அந்த தேவ நிமிஷத்தில்
நீ தொலைந்துபோவாய்!
--------------------------------------------------------------------------------------------------------------
உன்னை காதலித்துகொண்டிருக்கும்
நான் இறந்து போவேனா என்பது தெரியாது
ஆனால் இறக்கும் போதும்
உன்னை காதலித்துகொண்டிருப்பேன் என்பது மட்டும் தெரியும்
--------------------------------------------------------------------------------------------------------------
உன்னை
ஏன் இப்படிக் காதலித்துத்
தொலைக்கிறேன்??????
அடிக்கிற
அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு
அழுகிற குழந்தை மாதிரி.....
--------------------------------------------------------------------------------------------------------------
காற்றே
அவசரமொன்றுமில்லை....
அவள் சுவாசக் குழலை
சேதப்படுத்திவிடாமல்
சென்று வா...
அப்படியே
அவள் இதயத்தில்
எங்காவது நான்
இருக்கிறேனா என்பதையும்
பார்த்துவிட்டு வா !!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------
உன்மேல் கோபப்படுகிறபோதெல்லாம்
கொஞ்ச நேரங்கழித்து
ஏன் கோபித்தோம் என்றிருக்கும்
அப்போதெல்லாம்
உன் மேலிருக்கிற அன்பு
இன்னும் அதிகமாகும்
ஆனால் நீயோ
இனிமே கோபம் வருகிற மாதிரி
எந்தத் தப்பும் செய்ய மாட்டேன் என்கிறாய்
இல்லையில்லை
தவறுகள் செய்துகொண்டே இரு
அன்பு அதிகரித்துகொண்டே
இருக்கட்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------
உன்னிடம்
எந்த கெட்ட பழக்கமும்
கிடையாதென்பது
எனக்கு மகிழ்ச்சிதான்
எனினும்
வருத்தமாய் இருக்கிறது
நான் சொல்லி
நீ விட
ஒரு கெட்ட பழக்கம் கூட
இல்லையே உன்னிடம்
---------------------------------------------------------------------------------------------------------------
கடிகாரத்தை
திருடியவனையெல்லாம்
விரட்டி பிடித்திருக்கிறேன்
என் இதயத்தை
திருடி போகிறாய்
பேசாமல்
நின்றுகொண்டிருக்கிறேன்
தபு ஷங்கர் கவிதைகள் 1
துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு.
--------------------------------------------------------------------------------------------------------------
எனது அறையின் தினசரி காலண்டர்கூட
கேலி பேசுகிறது என்னை.
முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால்
அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம்.
பார்க்கவில்லையெனில் பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.
--------------------------------------------------------------------------------------------------------------
இவை இப்படித்தான் என்று
நான் நினைத்துக் கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய் நீ பொய்யாக்கி விடுகிறாய்..
உதிர்வதென்பது எப்போதும் சோகம் தான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து உதிர்கிற
ஒரு சின்னப் புன்னகை பொய்யாக்கி விடுகிறதே.
-------------------------------------------------------------------------------------------------------------
உன் கனவுகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா...
நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது '
பேசியது போதும் வா வீட்டுக்குப் போகலாம்'
என்று ஓரமாய் நின்று உன் குடும்பமே கெஞ்சிக் கொண்டிருந்ததே
அந்தக் கனவுதான்.
--------------------------------------------------------------------------------------------------------------
உன் கனவுகளைக் காணத் தொடங்கிய
காலத்திற்கு முன்பும் எனக்குச்
சில கனவுகள் வ்ந்ததுண்டு...
வண்ணத் திரைப்படங்கள் வருவதற்கு முன்பு வந்த
கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களைப் போல.
--------------------------------------------------------------------------------------------------------------
செடியிலும் பூத்துக்கொண்டே
உன்முகத்திலும் பூக்க
எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்?
--------------------------------------------------------------------------------------------------------------
நீயோ சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு லீப் வருடங்கள் ரொம்ப பிடிக்கும்.
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள் அதிகமாய் வாழலாம் உன்னுடன்!
--------------------------------------------------------------------------------------------------------------
என்னுடையது என்று நினைத்துதான்
இதுவரையில் வளர்த்து வந்தேன்.
ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.
--------------------------------------------------------------------------------------------------------------
நீ உறங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை மூடியிருக்கும் இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.
--------------------------------------------------------------------------------------------------------------
என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை
எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது,
காதலைத் தவிர!
-------------------------------------------------------------------------------------------------------------
சிந்திய மழை மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை
ஆனால் ஒவ்வொரு முறையும் நீ சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும் உன் கன்னத்துக்குள்ளேயே போய்விடுகிறதே!
--------------------------------------------------------------------------------------------------------------
இன்று காதலர்தினம்.
எல்லா காதலரும் ரோஜாத் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தோட்டத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் பூப்பறித்துச் சென்ற பிறகு தோட்டத்துக்குள் செல்வேன். காதலுக்காக பூக்களையெல்லாம் பரிசளித்துவிட்டு
காம்புகளோடு நிற்கும் ரோஜாச்செடிகளோடு
பரிமாறிக்கொள்வேன், உனக்கான என் காதலை!
---------------------------------------------------------------------------------------------------------------
நீ தொடுகிற பூக்களையெல்லாம்
என்னால் தொட முடிந்ததே இல்லை.
நீ தொட்டது எப்படி எனக்குத் தெரியும் என்கிறாயா.
உன் விரல்களைத்தான்
பூக்கள் அப்படியே வைத்திருக்கின்றனவே.
--------------------------------------------------------------------------------------------------------------
உன் காதலியாய் இருப்பது எனக்கு பிடிக்கவே இல்லை
கால்பந்து ஆடிவிட்டு நீ களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில் போட்டுக் கொள்ளத் துடிக்கும் என் ஆசையை
உன் காதலியாய் என்னால் நிறைவேற்ற முடியவில்லை
அதனால் உடனே என்னை மனைவியாக்கிக்கொள்.
Subscribe to:
Posts (Atom)