Wednesday, April 21, 2010

தபு ஷங்கர் கவிதைகள் 3


என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்

ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு

எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை

--------------------------------------------------------------------------------------------------------------

எதை கேட்டாலும்
உன் வெட்கத்தையே தருகிறாய்..
உன் வெட்கத்தை கேட்டால்
எதை தருவாய்..?

-------------------------------------------------------------------------------------------------------------

அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன..
உன்னை நினைவு
படுத்துபவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன

------------------------------------------------------------------

வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

-----------------------------------------------------------------------------------------------

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

----------------------------------------------------------------------------------------------

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

-----------------------------------------------------------------------------------------------

எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

----------------------------------------------------------------------------------------------

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.

---------------------------------------------------------------------------------------------- தெய்வமே,
உன்னை என் இதயத்திலிருந்து
வெளியேற்றிவிட்டு,
ஒரு பெண்ணைக்
குடிவைத்ததற்காகக்
கோபித்துக்கொண்டு
என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால்
தூணிலோ, துரும்பிலோகூட
வாசம் செய்ய முடியும்.
அவளால் முடியுமா?

----------------------------------------------------------------------------------------------

இந்தா என் இதயம்.
அதை நீ
விளையாடும்வரை
விளையாடிவிட்டுத் தூக்கிப் போட்டுவிடு.

அது
அதற்குத்தான்
படைக்கப்பட்டது.

----------------------------------------------------------------------------------------------

உறக்கத்திலிருந்து சட்டென்று
விழித்து பார்த்த போது
நீ அருகில் அமர்ந்து என்னையே
பார்த்துகொண்டிருந்தாய் ...
அப்புறம்
விழிப்பு வராதா என்ன .........

-------------------------------------------------------------------------------------------------------------

நீ முகம் கழுவுகையில் ஓடிய
தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா
வேண்டாம் என்று
நீ நீரில் விடுகிறாய்!

--------------------------------------------------------------------------------------------------------------

எல்லா கவிதைகளுமே
உன்னை பற்றியது எனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே

------------------------------------------------------------------------------------------------------------- நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கிற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை. 

-----------------------------------------------------------------------------------------------

ஒரு தாய்
தன் குழந்தைக்குச்
சோறூட்டுகையில்
நிலவைக் காட்டுவது மாதிரி
காதல்
எனக்கு உன்னைக் காட்டியது.

குழந்தை பரவசமாய்
நிலவைப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
தாய், தன் குழந்தையின்
வாய்க்குள்
உணவை ஊட்டுவது மாதிரி
நான் உன்னைப் பரவசமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கையில்...

காதல்
எனக்குள் ஊட்டியதுதான்
இந்த வாழ்க்கை! 
 
  

------------------------------------------------------------------

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரனாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.
 

 

No comments:

Post a Comment